தமிழ்நாடு

தாமரை என்றும் மலரவே மலராது: பாஜகவுக்கு சாபம்விட்ட ப.சிதம்பரம் மருமகள்!

Published

on

தன்னுடைய புகைப்படத்தை பாஜகவினர் வீடியோவில் விளம்பரப்படுத்தியதை அடுத்து தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மருமகள் ஸ்ரீநிதி சிதம்பரம் சாபமிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவினரும் சமீபத்தில் வெளியிட்ட விளம்பர வீடியோ ஒன்றில் பல்வேறு காட்சிகள் வெளியான நிலையில் அதில் பரத நாட்டு கலைஞரும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மருமகள் ஸ்ரீநிதி சிதம்பரமும் படமும் இடம் பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின் மருமகளான படத்தை பாஜகவினர் கவனிக்காமல் அந்த வீடியோவில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து ஸ்ரீநிதி சிதம்பரத்திற்கு சிலர் கூறுகையில் அவர் அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பாஜகவினர் என்னுடைய புகைப்படத்தை வீடியோவில் பயன்படுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது என்றும் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்றும் சாபம் இட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருக்கும் நிலையில் அந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

இதனை அடுத்து அந்த வீடியோவில் இருந்து ஸ்ரீநிதி சிதம்பரத்தின் காட்சியை நீக்க பாஜகவினர் முடிவு செய்துள்ளனர் என்றும் எடிட் செய்யப்பட்ட வீடியோ விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version