இந்தியா

வரலாறு காணாத சாதனை.. ஜனவரியில் மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Published

on

இந்தியர்கள் மத்தியில் தற்போது நாளுக்கு நாள் மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்பதையும் ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் சேமிக்கப்படும் தொகை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் மியூச்சுவல் ஃபண்ட் முறையில் சேமிக்கப்பட்டு இருக்கும் தொகை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் எஸ்ஐபி மூலம் 13,856 கோடி முதலீடுகள் எட்டியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்தம் சுமாராக 6.2 கோடி எஸ்ஐபி கணக்குகள் உள்ளன என்றும் இதன் மூலம் முதலீட்டாளர்கள் இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறார்கள் என்றும் இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரியில் மட்டும் 13,856 கோடியை எஸ்ஐபிய்யில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும் சில்லறை முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்வது அவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 ஆயிரம் கோடிக்கு மேல் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யப்படுவது தொடர்ச்சியாக இது நான்காவது மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து எஸ்ஐபி மூலம் முதலீடுகள் செய்யப்பட்ட தொகை பின்வருமாறு.

ஜனவரி 2022-ரூ 11,517 கோடி

பிப்ரவரி 2022- ரூ.11,438 கோடி

மார்ச் 2022-ரூ 12,328 கோடி

ஏப்ரல் 2022- ரூ.11,863 கோடி

மே 2022- ரூ 12,286 கோடி

ஜூன் 2022- ரூ 12,276 கோடி

ஜூலை 2022- ரூ 12,140 கோடி

ஆகஸ்ட் 2022- ரூ 12,693 கோடி

செப்டம்பர் 2022- ரூ 12,976 கோடி

அக்டோபர் 2022- ரூ 13,041 கோடி

நவம்பர் 2022-ரூ 13,306 கோடி

டிசம்பர் 2022- ரூ 13,573 கோடி

ஜனவரி 2023-ரூ 13,856 கோடி

2023ஆம் ஆண்டில் முதலீட்டாளர்கள் சந்தை ஏற்ற இறக்கத்தின் காரணமாக சிறிய, பெரிய மற்றும் மிட்கேப் நிதிகளில் முதலீடு செய்துள்ளனர். இது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் வரத்து அதிகரிக்க வழிவகுத்துள்ளது. மேலும் இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்டுகள் சங்கத்தின் (AMFI) சமீபத்திய புள்ளிவிவரங்கள், பங்கு மற்றும் பங்கு-இணைக்கப்பட்ட திட்டங்களில் நிகர முதலீடுகள் வியக்கத்தக்க வகையில் 71% அதிகரித்து 2022 டிசம்பரில் ரூ.7,303 கோடியிலிருந்து ரூ.12,547 கோடியாக உயர்ந்துள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.

எஸ்ஐபி தவிர, ஈக்விட்டி இன்ஃப்ளோக்களைப் பொருத்தவரை, சமீபத்திய ஈக்விட்டி இன்ஃப்ளோ ரூ. 12,000 கோடிக்கு மேல் கடந்த எட்டு மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச முதலீடுகள் ஆகும். இது ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மற்றும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களிடையே வளர்ந்து வரும் நம்பிக்கையைக் குறிப்பதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சந்தை ஏற்ற இறக்கம் இருந்தாலும். மிட்-கேப்ஸ், லார்ஜ்-கேப்ஸ், ஸ்மால்-கேப்ஸ், மல்டி-கேப்ஸ், ஃப்ளெக்ஸி-கேப்ஸ் மற்றும் அனைத்து வகையான ஈக்விட்டி செக்மென்ட்கள் உட்பட, பங்குச் சந்தையின் அனைத்துப் பிரிவுகளிலும் நேர்மறையான முதலீடுகளை பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது.

Trending

Exit mobile version