இந்தியா

’காந்தாரா’ படத்தை பார்க்க வந்த முஸ்லீம் ஜோடியை அடித்து உதைத்த முஸ்லீம் இளைஞர்கள்: அதிர்ச்சி சம்பவம்

Published

on

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ’காந்தாரா’ திரைப்படத்தை திரையரங்குகளில் காண வந்த முஸ்லீம் ஜோடியை முஸ்லிம் இளைஞர்கள் சிலர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்த ’காந்தாரா’ திரைப்படம் வெளியானது என்பதும், இந்த படம் உலகம் முழுவதும் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முகமது இம்தியாஸ் மற்றும் அவரது காதலி ஆகிய இருவரும் ’காந்தாரா’ படத்தை திரையரங்கிற்கு பார்க்க வந்துள்ளனர். அப்போது முஸ்லிம் இளைஞர்கள் சிலர் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்றும் ’காந்தாரா’ படம் இந்து மரபுகள் மற்றும் கட்டுக் கதைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அந்த ஜோடி படம் பார்க்க முயற்சி செய்தபோது அந்த கும்பல் அந்த ஜோடியை தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து தாக்கப்பட்ட இம்தியாஸ் மற்றும் அவரது காதலி காவல்துறையினர் புகார் அளித்த நிலையில் தாக்கியவர்கள் அப்துல் ஹமீட், அஷ்ரப், சாதிக், ஜபீர் ஜட்டிபல்லா மற்றும் சித்திக் பொருகுடே என அடையாளம் காணப்பட்டட்து.

இதனையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version