சினிமா

பிரபல இசையமைப்பாளர் இனியவன் திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி..

Published

on

ஓடங்கள் பட இசையமைப்பாளர் சம்பத் செல்வத்திடம் உதவியாளராக இருந்தவர் இனியவன். கவுரி மனோகரி உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை இசையால் பாடலாக்கியவர் இவர்தான்.

நேற்று முன் தினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் மரணமடைந்தார். இவரது மரணம் குறித்து வைரமுத்து வெளியிட்ட இரங்கல் செய்தியில் ‘இசை அமைப்பாளர் இனியவன் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மிகச்சிறந்த இசை அமைப்பாளர். தஞ்சை மாவட்டத்துக்காரர். தேர்ந்த இயக்குனர்களிடம் இவர் கைகோர்த்திருந்தால் திரை இசையையில் ஜொலித்திருப்பார்.

‘கவுரி மனோகரி’ படத்தில் கே.ஜே.ஜேசுதாசும் – எஸ்.பி.பியும் இணைந்து பாடிய “அருவி கூட ஜதியில்லாமல் சுரங்கள் பாடுது” பாடல் கேட்டால் இவர் ஆற்றல் புரியும். தலைவர் பிரபாகரனுக்குப் பிடித்த பாடல் அது என்று ஒரு ஈழ நண்பர் என்னிடம் சொன்னார். எனது ‘ஜென்மம் நிறைந்தது’ பாடலுக்கும் இசை இவரே.

ஐந்து நாட்களுக்கு முன்பு கூட பேசினோம். நல்ல உடல் நலனோடு இருந்தார். ‘ஓடங்கள்’ பட இசை அமைப்பாளர் சம்பத் செல்வத்திடம் இசை உதவியாளராக இருந்து அவர் மூலம் தனக்கு அறிமுகம் ஆனவர். நீண்ட கால நண்பர். இவரது உடல் சொந்த ஊரான தஞ்சைப் பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version