சினிமா செய்திகள்

இயக்குனர் வெங்கட் பிரபு தாயார் காலமானார்: திரையுலகினர் அஞ்சலி

Published

on

இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரன் மனைவியும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயாருமான மணிமேகலை என்பவர் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 69. மணிமேகலை அவர்களின் மறைவை அடுத்து அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

’கரகாட்டகாரன்’ உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவரும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவருமான கங்கை அமரனின் மனைவி மணிமேகலை என்பவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் இருந்ததால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11 மணிக்கு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மணிமேகலை அவர்களுக்கு வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர் என்பதும் வெங்கட்பிரபு பிரபல இயக்குனர் என்பதும் பிரேம்ஜி நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறைந்த மணிமேகலை அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகினர் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் கங்கை அமரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திரையுலகினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version