சினிமா செய்திகள்
பணத்தைத் திருப்பி கேட்ட சூரிக்கு கொலை மிரட்டல்!
![Soori - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/10/Soori.jpg)
மோசடி செய்து பெற்ற பணத்தைத் திருப்பி கேட்ட நடிகர் சூரிக்கு, கொலை மிரட்டல் வந்து இருபது திரைத் துறையினரிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீர தீர சூரன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காகச் சூரிக்கு வழங்கப்பட வேண்டிய 40 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாகக் கூடுதல் தொகை கொடுத்தால் நிலம் வாங்கி தருவதாகக் கூறியுள்ளனர்.
அதை நம்பி சூரி பணம் அளிக்க, ஒரு இடத்தை காண்பித்து பத்திரப்பதிவு செய்துள்ளனர். அப்போது அங்கு வந்திருந்த இடத்தின் உரிமையாளர் பத்திரப் பதிவு முடிந்த பிறகு பேசிய போது, உங்களுக்கா இந்த இடத்தை விற்றுள்ளார்கள். இந்த இடத்திற்கு வழியே கிடையாதே என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சூரி, நிலத்தை வாங்கிக்கொடுத்த விஷ்ணு விஷால் அப்பா ரமேஷ் மற்றும் அன்புபேல் ராஜன் இருவரிடமும் பணத்தைத் திருப்பி கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட அன்புவேல் ராஜன், இடத்தின் மதிப்பைக் குறைத்து மதிப்பிட்டு பணம் தருவதாகக் கூறியுள்ளார். மேலும் இதனால் ஏற்பட்ட இழப்புக்கு வேறு கையாடுமாறு ஏதாவது செய்வதாகக் கூறியுள்ளார்.
பணத்தைக் கொடுத்துவிட்டோம். எப்படியாவது பெற்றுவிடலாம் என்று நினைத்த சூரிக்கு 5 வருடங்கள் போராடியும் பணம் திரும்பக் கிடைக்கவில்லை. அதன் பிறகே நடிகர் சூரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.
அன்புவேல் ராஜனுக்கும், எனக்கும் பெரியதாகத் தொடர்பில்லை என்று கூறும் சூரி, விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் அளித்த நம்பிக்கையின் பெயரில்தான் அந்த இடத்தை தான் வாங்கியதாகக் கூறியுள்ளார்.
மேலும் பணத்தைக் கேட்டு அழுத்தம் கொடுக்கும் போது, பணம் வேண்டுமா இல்லை உயிரோடு இருக்கனுமா? உங்கள் மனைவி, பிள்ளைகள் என அனைவரும் கண்காணித்து வருகிறோம். கொன்றுவிடுவேன் என்று அன்புவேல் ராஜன் மிரட்டியுள்ளார். இந்த கொலை மிரட்டல் தகவல் திரைத்துறையினரிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.