தமிழ்நாடு
நீதிபதி கூறியதை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதா? தேர்தல் ஆணையம் கண்டனம்
சமீபத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு தேர்தல் ஆணையம் முக்கிய காரணம் என்றும் அரசியல் கட்சிகளுக்கு சரியானபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் தேர்தல் ஆணையம் மீது கொலை வழக்கு பதிவு செய்தாலும் தவறில்லை என்று நீதிபதிகள் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிபதிகளின் இந்த கருத்து கிட்டதட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவலுக்காக கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி கூறியதை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள தேர்தல் ஆணையத்தின் மனு விசாரணை செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.