தமிழ்நாடு
கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்த அபிராமியின் சகோதரர் தற்கொலை!
கள்ளக்காதலுக்காக இரண்டு குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்த அபிராமியின் சகோதரர் தற்போது தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த குன்றத்தூர் என்ற பகுதியை சேர்ந்த விஜய்-அபிராமியின் தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் அபிராமி டிக் டாக் மூலம் பிரியாணி கடைக்காரர் சுந்தரம் என்பவர் மீது கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அடுத்து கள்ளக்காதலனுடன் ஊரைவிட்டு செல்வதென முடிவு செய்த அபிராமி தனது இரண்டு குழந்தைகளையும் சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்தார்.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அபிராமியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அபிராமியின் சகோதரர் பிரசன்னா என்பவர் என்பவர் சென்னையில் வாழ்ந்து வந்தார். இவர் தனது வீட்டின் அருகே இருந்த இளம்பெண் ஒருவரை காதலித்த நிலையில் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் இளம் பெண்ணின் பெற்றோர்களுக்கு திடீரென அபிராமியின் சகோதரர் தான் பிரசன்னா என்பது தெரியவந்தது. இதனை அடுத்து திருமணத்தை நிறுத்தினர். பிரசன்னாவை காதலித்து இளம்பெண்ணும் அவரை வெறுத்து ஒதுக்கினார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரசன்னா நேற்று தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அபிராமியின் கள்ளக்காதல் அவருடைய குடும்பத்தை மட்டுமின்றி அவருடைய சகோதரரின் உயிரையும் பறித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.