கிரிக்கெட்

டாஸ் வென்ற ரோஹித் சர்மா எடுத்த அதிரடி முடிவு!

Published

on

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி உள்ளது. இன்றைய போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சற்றுமுன் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் டீகாக் களமிறங்கியுள்ளனர்

இன்றைய போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி என்பதும் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வென்று ஒரு போட்டியில் தோல்வியடைந்து உள்ளது என்பதால் இன்றைய போட்டியில் வெல்லும் அணி முதலாவது அல்லது இரண்டாவது இடத்துக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நின்று விளையாடும் மும்பை மற்றும் டெல்லி அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:

மும்பை அணி: டீகாக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், பும்ரா, டிரெண்ட் போல்ட்

டெல்லி அணி: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட், ஸ்டோனிஸ், ஹெட்மயர், லலித் யாதவ், அஸ்வின், ரபடா, அமித் மிஸ்ரா, அவேஷ் கான்,

Trending

Exit mobile version