Connect with us

இந்தியா

26 வயது பெண்ணிடம் ரூ.7.5 லட்சம் மோசடி.. வங்கி ஊழியரே செய்த அதிர்ச்சி முறைகேடு..!

Published

on

மும்பையில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஆன்லைன் பரிமாற்றத்தின் போது ரூ.7.5 லட்சத்தை இழந்ததாகவும் இந்த மோசடிக்கு வங்கி ஊழியரே காரணம் என்றும் செய்திகள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்லைன் பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதான ஒரு முறையாக இருந்தாலும் இதில் மிக எளிதாக மோசடி செய்வது நடந்து வருவதால் வங்கி வாடிக்கையாளர்கள் அவ்வப்போது பணத்தை இழந்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் மும்பையில் 26 வயதான பெண் ஒருவர் வங்கி ஊழியரால் 7.5 லட்சத்திற்கும் மேல் ஏமாற்றப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் உள்ள பாரத ஸ்டேட் பேங்க் வங்கியில் 26 வயது பெண் ஜானகி என்பவர் கணக்கு வைத்திருந்தார். இவர் அவ்வப்போது வங்கிக் கிளைக்கு செல்லும் போது பேமெண்ட் ஃபார்மை நிரப்ப உதவி செய்யுமாறு வங்கி ஊழியர் ஒருவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கு மற்றும் அவரது விவரங்களையும் அந்த வங்கி ஊழியர் தெரிந்து வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் ஜானகிக்கு தெரியாமல் அந்த வங்கி ஊழியர் அவரது கணக்கிலிருந்து பண மோசடி செய்ததாக தெரிகிறது. ஒவ்வொரு முறையும் அந்த பெண் பரிவர்த்தனைக்காக வங்கிக்கு செல்லும் போதெல்லாம் அந்த வங்கி ஊழியர் வலிய சென்று உதவி செய்ததாகவும் பரிவர்த்தனையை முடிக்க ஓடிபி உள்ளிட்டவற்றை அவரே அந்த பெண்ணின் தொலைபேசியில் பார்த்து தெரிந்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஜானகி தனது வங்கி கணக்கில் உள்ள இருப்பை சரிபார்த்த போது ஐந்து லட்சம் மட்டுமே இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அந்த வங்கி ஊழியரிடம் கேட்டபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறைவாக காட்டலாம் என்றும் சரி செய்தவுடன் ஸ்டேட்மென்ட் அனுப்புவதாகவும் கூறியிருந்தார். இதனை எடுத்து அவர் அனுப்பிய ஸ்டேட்மெண்டில் 12 லட்சம் இருப்பு இருப்பதாக தெரிந்தது.

ஆனால் சந்தேகம் அடைந்த ஜானகி வங்கி மேலாளரை சந்தித்து தனது வங்கி அறிக்கை கேட்டபோது அவர் உண்மையான வங்கி அறிக்கை எடுத்துக் கொடுத்த போது அதில் ஐந்து லட்சம் மட்டுமே இருப்பு இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரது வங்கி கணக்கிலிருந்து 7 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்த வங்கி ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து தங்களது வங்கி விவரங்களை வங்கி ஊழியர் ஆக இருந்தாலுமே அவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது என தெரிய வருகிறது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!