Connect with us

இந்தியா

கடைசி காலத்தில் அம்மாவை கவனிக்க முடியாத மகன்.. மன வருத்தத்தில் எடுத்த முடிவுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

Published

on

கடைசி காலத்தில் அம்மாவை கவனிக்க முடியாத மகன் எடுத்த அதிரடி முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மும்பையை சேர்ந்த தன்ராஜ் என்பவர் 25 ஆண்டுகளாக தனது அம்மாவை தன்னுடன் வைத்து கவனித்துக் கொண்டார். அவரது மனைவி விஜயாவும் தனது மாமியாருக்கு தொண்டு சேவை புரிந்து வந்தார். ஆனால் தன்ராஜின் தாயாரின் கடைசி காலத்தில் தனது கிராமத்தில் இருக்க விரும்பி சென்று விட்டார். இந்த நிலையில் ஒரு சில வருடங்கள் கிராமத்தில் இருந்த தன்ராஜின் தாயார் உடல் காரணமாக அங்கேயே காலமானார்.

தனது தாயாரின் சொந்த கிராமத்தில் அவரை கவனிக்க யாரும் இல்லாததுதான் அவர் இறந்ததற்கு காரணம் என்ற மனக்குறையுடன் தன்ராஜ் ஒரு சில ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். இதனை அடுத்து அவர் அதிரடி முடிவெடுத்து தனது தாயாரை கடைசி காலத்தில் கவனிக்க முடியாமல் செய்த தவறுக்கு பிராயசித்தமாக ஒரு முதியோர் இல்லத்தை தொடங்க முடிவு செய்தார்.

ஓய்வு பெற்றவுடன் அவருக்கு வந்த பணம் முழுவதையும் முதியோர் இல்லம் கட்டுவதற்காக திட்டமிட்டார். முதலில் ஒரு சொந்த இடம் வாங்கி அதில் ஒரு கட்டிடத்தை கட்டி முதியோர் இல்லமாக மாற்றினார். அந்த முதியோர் இல்லத்தில் வரும் 8 பேருக்கு ஒரு பணியாளர் 24 மணி நேரம் நர்சுகள் பராமரிப்பு மற்றும் அந்த முதியோர்களின் குழந்தைகளுக்கு கல்வி செலவுக்காக மாதம் பத்தாயிரம் ரூபாய் என பல்வேறு உதவிகளை செய்தார்.

பார்வதி பாபாஜி ஹசாரே என்ற அறக்கட்டளை மூலம் அவர் இந்த தொண்டுகளை சில ஆண்டுகளாக செய்து வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட முதியோர் இல்லம் தற்போது மிகப்பெரிய அளவில் ஏராளமான முதியோர்களை காக்கும் ஒரு இல்லமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தன்ராஜின் மனைவி விஜயா கூறிய போது எங்கள் மாமியார் எங்களுடன் 25 ஆண்டுகள் இருக்கும்போது நன்றாக இருந்தார். ஆனால் ஒரு சில ஆண்டுகள் அவர் தனியாக கிராமத்தில் இருந்தபோது அவரை கவனிக்க யாரும் இல்லாததால் அவர் காலமானார். இது எனது கணவருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. இதனால் தான் எங்கள் மாமியாரின் வயதில் உள்ள முதியோர்களை பாதுகாக்க நாங்கள் முடிவு செய்தோம். முதியோர்களுக்கு செய்யும் சேவை நம் பெற்றோருக்கு செய்யும் சேவை போலாகும் என்று எங்கள் மனம் உணர்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தன்ராஜ் மற்றும் விஜயா தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!