இந்தியா

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1200 புள்ளிகள் வீழ்ச்சி: முதலீட்டாளர்கள் கவலை!

Published

on

வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச் சந்தை 1200 புள்ளிகளுக்கும் அதிகமாக சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்து வந்த நிலையில் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் பெரும் லாபம் பெற்ற நிலையில் திடீரென இன்று பங்குச்சந்தை அதல பாதாளத்தில் விழுந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,256 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 58,380 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 373 புள்ளிகள் குறைந்து 17,391 புள்ளிகளில் வர்த்தகமாகிறது

முன்னணி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தாலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனம், மாருதி, பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி, ஹெச்.சிஎல் டெக், பஜாஜ் பின்செர்வ், எஸ்பிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் மோசமாக சரிந்துள்ளது.

உலகெங்கும் அதிகரித்துள்ள பணவீக்கம் குறித்தான அச்சம் மற்றும் அன்னிய முதலீடுகள் விகிதம் குறையலாம் என எதிர்பார்ப்பு ஆகியவையே இன்றைய பங்குச்சந்தை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version