இந்தியா

ஒரே நாளில் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் மும்பை!

Published

on

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில், சனிக்கிழமை 9 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 9,090 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 27 நபர்கள் இறந்துள்ளனர்.

மும்பையில் 62,187 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு எதிரான சிகிச்சையைப் பெற்று வருகின்றனர். இதுவரையில் 3,66,265 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,322 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதுவரையில் மும்பையில் கொரோனா தொற்று காரணமாக 11,751 நபர்கள் இறந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version