இந்தியா

மீண்டும் கருப்பு பூஞ்சை நோய்.. அதிர்ச்சியில் மக்கள்!

Published

on

மும்பையில் மீண்டும் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்குக் கருப்பு பூஞ்சை நோய் ஒருவரைப் பாதித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு அதிகளவில் ஸ்டீராய்டு போன்ற மருந்துகள் வழங்கும் போது அவர்களுக்கு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை உள்ளிட்ட நோய்கள் பாதித்து வந்தன.

கொரோனா மூன்றாம் அலையில் நேற்று வரையில் கருப்பு பூஞ்சை பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் மும்பையில் ஒருவருக்குக் கருப்பு பூஞ்சை தொற்று உறுதியாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த 70 வயதான அந்த நோயாளி, ஜனவரி 5-ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படு இருந்தார்.

இந்நிலையில் அவருக்குக் கருப்பு பூஞ்சை தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா இரண்டாம் அலையில் கருப்பு பூஞ்சை நோய் பலரையும் பாதித்தது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version