சினிமா செய்திகள்

நடிகை கங்கனா ரனாவத் கைது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மும்பை காவல்துறை!

Published

on

பிரபல நடிகை கங்கனா ரனாவத் கடந்த மாதம் சீக்கியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மும்பை காவல்துறையினர் வழக்கு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கங்கனா ரனாவத் கைது செய்வது குறித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ள தகவலை தற்போது பார்ப்போம்.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதும் அரசியல் கருத்துக்களை தெரிவிக்கும் அவர் சமூகக் கருத்துக்களையும் சர்ச்சைக்குரிய வகையில் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த மாதம் சீக்கியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியது தொடர்பாக சீக்கிய அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை காவல்துறை கங்கனா மீது வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற போது நடிகை கங்கனா ரனாவத்தை அடுத்த மாதம் 25ஆம் தேதி வரை கைது செய்ய மாட்டோம் என மும்பை காவல்துறை உறுதி அளித்துள்ளது.

காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கங்கனா ரனாவத் மீதான புகார் குறித்து அடுத்த கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த விசாரணை முடியும் வரை அவரை கைது செய்ய மாட்டோம் என்றும் கூறினார். இதனை அடுத்து நீதிபதிகள் இந்த மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version