கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பைக்கு பதில் இந்த இரு நகரங்களில் போட்டிகள் மாற்றமா?

Published

on

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக அதிகமாக பாதித்து வருகிறது என்பதும் குறிப்பாக தலைநகர் மும்பையில் தினமும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மும்பையில் நடக்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் வேறு இரு நகரங்களுக்கு மாற்ற பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் சென்னை, மும்பை உள்பட 6 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 10 பேர்களுக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மும்பையில் போட்டியைத் தொடர்ந்து போட்டி ஐபிஎல் போட்டியை நடத்த முடியுமா என பிசிசிஐ ஆய்வு செய்து வருகிறது. ஒருவேளை மும்பையில் நடத்த முடியாவிட்டால் ஹைதராபாத் மற்றும் இந்தூர் ஆகிய இரண்டு நகரங்களில் நடத்த ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் பிசிசிஐ தரப்பிலிருந்து வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version