சினிமா செய்திகள்

’தர்பார்’ பட நடிகரின் வீட்டுக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ’தர்பார்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் ஒருவரின் வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் தர்பார் உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல பாலிவுட் படங்களில் நடித்தவர் நடிகர் சுனில் ஷெட்டி. இவர் 25 ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்பதும் இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சுனில் ஷெட்டி தனது குடும்பத்தினருடன் மும்பையில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் வசித்து வருகிறார். தற்போது அந்த குடியிருப்பில் வசித்து வரும் சிலருக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அந்த ஒட்டுமொத்த அடுக்குமாடி குடியிருப்புக்கு, மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் அதே நேரத்தில் நடிகர் சுனில் ஷெட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் மும்பை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சுனில் ஷெட்டி வசிக்கும் அபார்ட்மென்ட்டுக்கு சீல் வைத்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version