கிரிக்கெட்

152 ரன்கள் மட்டுமே எடுத்தும் அசத்தல் வெற்றி பெற்ற மும்பை: கொல்கத்தாவின் சோகம்!

Published

on

நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 152 ரன்கள் மட்டுமே எடுத்த போதிலும் அசத்தலாக பந்து வீசி 142 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து மும்பை அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 56 ரன்கள் எடுத்தார்

இதனை அடுத்து 153 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான ராணா மற்றும் கில் ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் அதன் பின் விளையாடிய பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட இரட்டை இலக்க ரன்களை எடுக்க வில்லை

இதனை அடுத்து கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாக ராகுல் சஹார்தேர்வு செய்யப்பட்டார் என்பதும் அவர் மிக அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version