உலகம்
மும்பை பயங்கரவாத தக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர் பாகிஸ்தானில் கைது!
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய, லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த ஜகியுர் ரஹ்மான் லக்வி என்ற தீவிரவாதி நேற்று பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதற்கு எதிரான தேடுதல் வேட்டையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் காவல் துறையினர் இவரை கைது செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.
உளவுத்துறைக்குக் கிடைத்த தகவலின் பெயரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருந்துக் கடைகள் மூலமாகப் பயங்கரவாதத் திட்டங்களுக்கு நிதி திரட்டியுள்ளார். அதை தனது சொந்த செலவுகளுக்காகவும் பயன்படுத்தியுள்ளார் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர் மீதான குற்றங்களை லாகூர் நீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு 166 நபர்கள் உயிர் இழக்கக் காரணமாக இருந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் முக்கியமாகச் செயல்பட்டவர் ஜகியுர் ரஹ்மான் லக்வி என்பது குறிப்பிடத்தக்கது.