உலகம்
யாழ்ப்பானத்தில் இரவோடு இரவாக அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம்..!
இலங்கையில் யாழ்ப்பானத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக தகர்க்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவாகக் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நேற்று இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. நேற்று இரவு திடீரென 8.45 மணி போல் பல்கலைக்கழகம் முன்பு திரண்ட புல்டோசர் இயந்திரங்களால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் நினைவிடம் நோக்கி வந்துள்ளனர்.
ஆனால், மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் போலீஸார் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனட். இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் யாழ்ப்பானம்ம் பல்கலைக்கழகத்துக்கு முன்னாள் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கூடியுள்ளனர். இதனால் பல்கலைக்கழகம் முன்னர் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பானத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் தகர்த்தப்பட்டுள்ளதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. (1/2)
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 9, 2021