இந்தியா

முகேஷ் அம்பானி வீட்டில் இன்னொரு திருமணம்.. பிரமாண்டமாக நடந்த நிச்சயதார்த்தம்!

Published

on

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் வீட்டில் சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு திருமணங்கள் நடந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் இன்று நிச்சயதார்த்தம் மிகவும் பிரமாண்டமாக ராஜஸ்தானில் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இரு தரப்பு பெற்றோர்கள் இவர்களது திருமணத்தை பேசி முடித்து இன்று நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். ராதிகா மெர்ச்சன்ட் ஷைலா – வீரேன் மெர்ச்சன்ட் தம்பதிகளின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய எரிசக்தி வணிகத்தை ஆனந்த் அம்பானி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரது திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் உள்ள கோவிலில் ஆனந்த் – ராதிகாவின் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்வை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதோடு, தனது வாழ்த்துக்களையும் மணமக்களாக போகும் இருவருக்கும் தெரிவித்துள்ளார். மேலும் நிச்சயதார்த்த விழா குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரம் நடித்த ராதிகா கடந்த 2008ஆம் ஆண்டில் ஈஷா அம்பானி நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டார் என்பதும் அப்போதுதான் ஆனந்த் அம்பானியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version