வணிகம்

ஒரு டீல்.. ஆசியாவின் நம்பர் 1 கோடீஸ்வரனாக முன்னேறிய அம்பானி!

Published

on

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பேஸ்புக் உடன் போட்ட ஒரு ஒப்பந்தத்தால், ஆசியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார்.

பேஸ்புக் நிறுவனம் புதன்கிழமை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 9.9 சதவீத பங்குகளை 44,000 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் பல மடங்கு உயர்ந்தது. மேலும் இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 49.2 பில்லியன் டாலர்களாகவும் அதிகரித்தது. எனவே முகேஷ் அம்பானி ஆசியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

எனவே சீனாவின் அலிபாபா நிறுவனத் தலைவர் ஜாக் மா ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

Trending

Exit mobile version