வணிகம்

லண்டனில் 300 ஏக்கரில் வீடு வாங்கி குடிபெயர்கிறாரா அம்பானி!

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய கோடீசுவரரான முகேஷ் அம்பானி லண்டனில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வீடு ஒன்றை வாங்கி குடிபெயர்வதாக மிட்-டேவில் செய்தி ஒன்று வெளியானது.

அந்த செய்தியில், இந்த ஆண்டு தீபாவளிக்குப் பிறகு மும்பையில் உள்ள தனது ஆடம்பர வீடு ஆண்டிலியாவில் இருந்து லண்டனில் ஒரு வீட்டை வாங்கி முகேஷ் அம்பானியின் குடும்பம் அங்கு குடிபெயர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், முகேஷ் அம்பானி மற்றும் அவர் குடும்பத்தினருக்கும் லண்டன் உள்ளிட்டு உலகின் எந்த நாட்டிலும் குடிப்பெயரும் எண்ணம் ஏதுமில்லை எனக் கூறியுள்ளது.

லண்டன் ஸ்டோன் பார்க் மேன்ஷன் 1908-ம் ஆண்டு முதல் கிளப் ஆக மாற்றப்பட்டது. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கூட அந்த மேன்ஷன் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஸ்டோன் பார்க் மேன்ஷனனி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அண்மையில் வாங்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அதுவே முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டன் குடிபெயர உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது எனவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version