Connect with us

இந்தியா

துப்புறவு தொழிலாளியாக எம்.எஸ்.சி படித்த பெண்: ஊடக செய்தியால் திடீர் திருப்பம்!

Published

on

எம்எஸ்சி படித்த பெண் ஒருவர் குடும்ப கஷ்டம் காரணமாக துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்தபோது அவரது செய்தி ஊடகத்தில் வந்ததால் அவரது வாழ்வில் திடீர் திருப்பம் ஏற்பட்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரஜனி என்பவர் கூலி விவசாயின் மகளாக இருந்தார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் திடீரென அவரது கணவருக்கு இதய பிரச்சனை ஏற்பட்டதால் அவர் படுக்கையாக விழுந்தார். எனவே கணவர், குழந்தைகள், மாமனார், மாமியார், என அனைவரையும் காப்பாற்ற வேண்டிய நிலைமை ரஜனியின் தலையில் விழுந்தது.

இதனை அடுத்து அவர் தனது குடும்ப வறுமை காரணமாக துப்புரவு பணியாளர் வேலையில் சேர்ந்தார். எம்எஸ்சி ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்த அவர் துப்புரவு பணியாளர் வேலையில் சேர்வது குறித்து எந்தவிதமான தயக்கமும் காட்டவில்லை. தனக்கு தனது குடும்பம் தான் முக்கியம் என்று அவர் அந்த பணியை செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த ஊடகம் ஒன்று அவரை பேட்டி எடுத்தது. அவரது படிப்பு மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் இந்த பணியில் சேர்ந்ததாக அவர் அந்த பேட்டியில் விரிவாக கூறியிருந்தார். இந்த பேட்டி ஊடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த செய்தியை பார்த்த தெலுங்கானா மாநில சிறப்பு தலைமைச் செயலாளர் மற்றும் நகர்புற வளர்ச்சி செயலாளர் ஆகியோர் ரஜனியை நேரில் அழைத்து அவரது சான்றிதழை சரி பார்த்தனர். பின்னர் அவருக்கு பூச்சிஇயல் துறையில் உதவி பூச்சியியல் நிபுணர் என்ற பணிக்கு நியமன ஆணையை வழங்கினர்.

தற்போது அவருக்கு கை நிறைய சம்பளம் கிடைப்பதாகவும் தனது குடும்பத்தை அவர் மகிழ்ச்சியுடன் காப்பாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரே ஒரு ஊடகத்தில் வந்த செய்தி ஒரு பெண்ணின் வாழ்க்கையே தலைகீழாக திருப்பி விட்டதை கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!