கிரிக்கெட்

ஐபிஎல் 2022: திடீரென விலக முடிவெடுத்த தோனி, அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published

on

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி திடீரென பதவி விலகி இருப்பதாகவும் அவர் இந்த ஐபிஎல் போட்டியில் விளையாட்டு வீரராக மட்டும் விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜடேஜா கேப்டன் பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடங்கியதிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரும் தோனி இந்த ஆண்டும் கேப்டனாக நீடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் திடீரென தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பதாகவும் தனது கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் அவர் கொடுத்து இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஜடேஜாவின் தலைமையில்தான் சிஎஸ்கே அணி செயல்படும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version