தமிழ்நாடு
2 வயது குழந்தையை தாக்கிய தாய் கைது!
செஞ்சி அருகே இரண்டு வயது குழந்தையை தாய் ஒருவர் தாக்கிய வீடியோ நேத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்தனர். இந்த நிலையில் அந்த தாய் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
செஞ்சி அருகே துளசி என்ற பெண் பிரேம்குமார் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த கோபத்தில் தனது இரண்டு வயது குழந்தையை கொடூரமாக தாக்கினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்தனர்.
இந்த நிலையில் குழந்தையை தாக்கிய தாய் துளசி, ஆந்திராவில் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து நேற்று தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று அவரை கைது செய்தனர். இதனையடுத்து அவர் இன்று நீதிபதி தினேஷ் முன் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் பிரேம்குமார் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் குழந்தையை தாக்கியதாக தாய் துளசி வாக்குமூலம் கொடுத்து உள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரேம்குமார் என்பவரையும் பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இரண்டு வயது குழந்தையை பெற்ற தாயே கொடூரமாக தாக்கியதை அடுத்து அவருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஆத்திரத்துடன் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இரண்டு வயது குழந்தையை தாய் கொடூரமாக தாக்கிய வீடு வரை யாரும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று குழந்தைகள் நல ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.