உலகம்
பரிதாப புகைப்படம்.. இறந்து போன குழந்தை திமிங்கலத்துடன் ஒருவாரமாக நீந்தும் அம்மா திமிங்கலம்!
ஒட்டவா: கனடாவின் கடல் பகுதியில் இறந்து போன, குட்டி திமிங்கலத்துடன் ஒருவாரமாக நீந்தும் அம்மா திமிங்கலத்தின் புகைப்படம் வெளியாகி உள்ளது.
பொதுவாக கடல் உயிரினங்களில் திமிங்கலங்கள், டால்பின்கள் அதிக பாசம் கொண்டவை என்று கூறப்படும். அந்த வகையில் தற்போது கனடாவின் கடல் பகுதியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அங்கு ஒருவாரம் முன்பு பிறந்து சில மணி நேரத்தில் இறந்து போன குட்டி திமிங்கலத்தை பிரிய மனம் இல்லாமல் அதன் அம்மா திமிங்கலம் தூக்கிக் கொண்டே கடலில் நீந்தி வருகிறது. கடந்த ஒரு வாரமாக அது அப்படியே நீந்தி வருகிறது.
இந்த புகைப்படம் உறைய வைக்கும் வகையில் உள்ளது. அந்த திமிங்கலம் இருக்கும் குழுவில் கடந்த 3 வருடத்தில் பிறந்த ஒரே திமிங்கலம் இதுமட்டும்தான். அதனால் அந்த குழுவே இதனால் பெரிய வருத்தத்தில் உள்ளதாக கடலியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.