உலகம்

அடுத்தடுத்த 2 பிரசவத்திலும் இரட்டை குழந்தைகள்.. 500 மில்லியனில் ஒருவருக்கு நடக்கும் அதிசயம்..!

Published

on

ஒரு பெண் இரட்டை குழந்தை பெற்றாலே அதிசயமாக பார்க்கப்படும் நிலையில் அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அடுத்தடுத்த பிரசவங்களில் தொடர்ச்சியாக இரண்டு முறை இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்திருப்பது பெரும் ஆசிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிரிட்னி மற்றும் ஆல்பா என்ற தம்பதிகள் கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தினார். இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் அவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்த நிலையில் மீண்டும் ஆல்பா கர்ப்பமானார். இதனை அடுத்து மூன்றாவது ஆக ஒரு குழந்தை தனக்கு பிறக்க போவதை நினைத்து பிரிட்னி மற்றும் ஆல்பா தம்பதிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கும்போது அவருக்கு மீண்டும் இரட்டை குழந்தைகள் உருவாகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்த பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதே நேரத்தில் இரண்டாவது முறையாக கருவாகி இருக்கும் இரட்டை குழந்தைகள் சிக்கலில் இருப்பதாகவும் கருப்பையில் ஒரே நஞ்சு கொடியில் இரு குழந்தைகளும் இருப்பதால் பிரசவத்தின் போது சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்பட்டது.

அமெரிக்காவில் மிக அரிதாக மட்டுமே இவ்வகையான கர்ப்பம் நடைபெறும் என்றும் இதனை அடுத்து அந்த பெண்ணை முறையாக கவனிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் முடிவு செய்தனர். இரட்டை குழந்தைக்கு தண்டு வட்டத்தில் சிக்கல் இருக்கும் ஆபத்தை உணர்ந்ததால் 24 ஆவது வாரத்திலேயே ஆல்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை எடுத்து அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த நிலையில் அவர் சி பிரிவு என்ற தொழில்நுட்பத்தின் மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். தற்போது குழந்தைகள் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் பிரசவத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் என இரண்டே வருடத்தில் அந்த குடும்பத்தின் எண்ணிக்கை ஆறு ஆக மாறியதை எடுத்து அவரது உறவினர்கள் மகிழ்ச்சியில் அடைந்துள்ளனர். எங்கள் குடும்பம் பெரிதானதை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் நான்கு குழந்தைகளையும் நாங்கள் நல்ல முறையில் வளர்த்து படிக்க வைப்போம் என்றும் குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

500 மில்லியன்களில் ஒருவருக்கு தான் தொடர்ச்சியாக இரண்டு முறை இரட்டை குழந்தை பிறக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த குழந்தைகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version