தமிழ்நாடு
ஒரு வயது குழந்தைக்கு மது கொடுத்து கொலை: 5வது காதலனுக்காக கொலை செய்த பெண்
ஐந்தாவது காதலனுடன் உல்லாசமாக இருக்க ஒரு வயது குழந்தை இடைஞ்சலாக இருப்பதை அடுத்து அந்த குழந்தைக்கு சோறுடன் மது கொடுத்து கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உதகையை சேர்ந்த கீதா என்பவர் ஏற்கனவே மூன்று திருமணம் செய்து மூன்று கணவரிடம் இருந்து பிரிந்து உள்ளார். இதனை அடுத்து ஒரே நேரத்தில் இரு ஆண்களை அவர் காதலித்து வந்ததாகவும் இந்த காதலுக்கு தனது ஒரு வயது குழந்தை இடைஞ்சலாக இருந்ததை அடுத்து சோறுடன் மது கொடுத்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கொலையை உறுதி செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் ஒரு குழந்தை தனது காதலுக்கு இடைஞ்சலாக இருந்ததால் சோறுடன் மது கொடுத்து, தொட்டிலில் படுக்க வைத்து அந்த குழந்தையை சுவற்றுடன் மோத வைத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே தனது ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.