தமிழ்நாடு

பச்சிளம் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற கல்நெஞ்ச தாய்!

Published

on

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த 23 வயதான ஜெலஸ்டினா என்பவர் பிறந்து 18 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜெலஸ்டினா-சத்தியராஜ் தம்பதியினருக்கு சில தினங்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே நிஷாந்தி என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தை கடந்த 12-ஆம் தேதி பாலூட்டும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்தார்.

ஆனால் பிரேத பரிசோதனையில் குழந்தையின் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தது தெரியவந்ததையடுத்து குழந்தையின் தாய் ஜெலஸ்டினாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து அவர்களுக்கு 3 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. ஆனால் அதனை மறைத்து இரண்டாவதாக என்ன திருமணம் செய்துகொண்டார்.

இதனால் நான் வெறுப்பில் இருந்தேன். மேலும் ஏற்கனவே ஒரு பெண் குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு வரும் நான் இந்த குழந்தையையும் வளர்க்க முடியாமல் கஷ்டப்படுவதை விட அந்த குழந்தையை கொன்றுவிடலாம் என முடிவு செய்தேன். இதனையடுத்து குழந்தையின் காலை பிடித்து மண்டையை தரையில் ஓங்கி அடித்தேன் இதனால் குழந்தை அலறி துடித்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. பின்னர் குழந்தை பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக நாடகமாடினேன் என தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version