இந்தியா

எக்ஸ்கியூஸ் மி.. அந்த பயல எழுப்பி விடு!…குட்டி யானையை எழுப்பும் அம்மா யானை (வீடியோ)…

Published

on

விலங்குகளில் அதிக புத்திசாலித்தனம் உள்ள விலங்கினம் யானை. ஆனால், யானைகளின் வாழ்விடங்களை மனிதன் ஆக்கிரமிக்க துவங்கி விட்டான். எனவே, தண்ணீர் மற்றும் உணவுக்காக யானைகள் வாழும் இடத்திலிருந்து மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு வருகிறது. சில சமயம் மனிதர்களை தாக்கி கொன்றும் விடுகிறது. இப்படி பலர் இறந்தும் போயுள்ளனர்.

இது ஒருபுறம் எனில், குட்டி யானை ஒன்று தூங்கிக் கொண்டிருக்க, தாய் யானை அதை எழுப்ப முயலும் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. ஒரு பூங்காவில் தாய் யானை எவ்வளவு எழுப்பியும் குட்டி யானை எழுந்திருக்கவில்லை. எனவே, பூங்கா ஊழியர்களை உதவிக்கு அழைத்து வந்து தாய் யானை குட்டி யானையை எழுப்பி பின்னர் அங்கிருந்து அழைத்து சென்றது.

குட்டி யானை தொடர்பான வீடியோக்களை அனைத்துமே எப்போதும் குழந்தைகளை பெரிதும் கவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/buitengebieden_/status/1438966385380663299

seithichurul

Trending

Exit mobile version