தமிழ்நாடு
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
அரசு பள்ளியில் தற்போது மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி காலையில் சிற்றுண்டியும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்தான காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் முதல் கட்டமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
மேலும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகளில் அறுபத்தி மூன்று நகராட்சிகளில் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி நகராட்சிகளில் 708 நகர்ப்புற மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்
திமுக ஆட்சி தொடங்கி ஒரு ஆண்டு முழுமை பெற்ற நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு கேள்வி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது