இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனாவில் இருந்து குணமாகி கடந்த 24 மணி நேரத்தில் 26,490 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதாகவும், கொரோனாவால் ஒரே நாளில் நாடு முழுவதும் 251 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,17,87,534
என்றும் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை டிஸ்சார்ஜ்: 1,12,31,650 என்றும் தற்போது
சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,95,192 என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 1,60,692 பலியாகியுள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருவதாகவும் குறிப்பாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி, பஞ்சாப், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ள நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.