இந்தியா
கர்நாடகாவில் 50 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: பெங்களூரில் மட்டும் 26 ஆயிரம்!
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் மிகவேகமாக அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக 40 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா கேஸ்கள் தினமும் கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 50 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இன்று ஒரே நாளில் கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 50,210 என்றும் கொரோனா வைரஸிலிருந்து கூட குணமானவர்களின் எண்ணிக்கை 22, 842 என்றும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 19 என்றும் கர்நாடக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
மேலும் தற்போது கர்நாடகாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3,57,796 என்று அறிவித்துள்ளது.கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,299 என்றும் கர்நாடகாவில் இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 220,459 என்றும் கர்நாடக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் ஐம்பதாயிரத்தை கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தாண்டி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமீபத்தில்தான் கர்நாடகாவில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.