தமிழ்நாடு
12ஆம் வகுப்பு தேர்வை 32 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லையா? அதிர்ச்சி தகவல்
இன்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வை 32 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதவில்லை என தேர்வுத்துறை கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. பெரும் பாதுகாப்புடன் அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசு தேர்வுத் துறையால் செய்யப்பட்டு இந்த தேர்வு இன்று நடத்தப்பட்டது .
12ஆம் வகுப்பு மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு எழுத வந்தனர் என்பதும் அவர்களை வாழ்த்தி ஆசிரியர்கள் தேர்வு எழுத ஊக்குவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுஎழுத 8.27 லட்சம் பேர் பதிவு செய்த நிலையில் அதில் 32,264 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தேர்வு எழுத மாணவர்கள் வராததற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தேர்வு பயம் காரணமாகவும் மற்றும் ஒருசில காரணங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அடுத்தடுத்த தேர்வுகளை எழுத அனைத்து மாணவர்களையும் ஊக்குவிக்க பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களில் படவேண்டும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.