இந்தியா

1ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை: மாரல் சயின்ஸ் ஆசிரியருக்கு 29 ஆண்டுகள் சிறை!

Published

on

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும் மாரல் சயின்ஸ் ஆசிரியர் ஒருவர் ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டல் செய்துள்ள நிலையில் அந்த ஆசிரியருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் மாரல் சயின்ஸ் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் படிக்கும் ஒன்றாம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 9 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஒன்றாம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மாரல் சயின்ஸ் ஆசிரியருக்கு 29 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அது மட்டுமின்றி அவருக்கு 2.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. போக்சோ நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் பாலியல் தொல்லை செய்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் 9 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு தற்போது தண்டனை கிடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version