இந்தியா
நோய்வாய்பட்ட பாட்டியை கட்டியணைத்து ஆறுதல் சொல்லும் குரங்கு… வைரல் வீடியோ….
மனிதர்களை போலவே விலங்குகளுக்கும் செண்டிமெண்ட் உண்டு. ஆனால், மனிதர்கள் என்னவோ விலங்குகளை விலங்குகளாக மட்டுமே பார்க்கின்றனர். அவற்றுக்கும் பாசம், செண்டிமெண்ட், அன்பு, காதல், இரக்கம் என அனைத்து உணர்வுகளும் உண்டு..
புலி, சிங்கம், சிறுத்தை, யானை மற்றும் பறவைகள் கூட மனிதர்களிடம் நெருக்கமாக, அன்பாக பழகும், விளையாடும் வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ஏராளமாக வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நோய்வாய்ப்பட்ட ஒரு மூதாட்டியை குரங்கு ஒன்று அன்புடன் கட்டியணைத்து ஆறுதல் சொல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் லாங்கூரில் நடைபெற்றது. அந்த மூதாட்டி அந்த குரங்குக்கு தினமும் தவறாமல் உணவு அளிப்பார். கடந்த சில தினங்களாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்ததால், பாட்டியை எங்கே கணோம் என கருதிய அந்த குரங்கு, அவரின் வீட்டிற்கே வந்துவிட்டது.
மேலும், அந்த பாட்டியின் மீது ஏறி அவரின் மீது படுத்து, அவரின் தோளில் சாய்ந்து அன்பு காட்டியது. அதன்பின் அந்த குரங்கு வெளியேறிவிட்டது. இந்த வீடியோவை யுடியூப்பில் இதுவரை 4 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கும் மேல் பார்த்து ரசித்துள்ளனர்.