சினிமா செய்திகள்

நடிகர் ஆர்யா மீது பண மோசடி புகார் – தமிழ்த் திரையுலகில் புயலைக் கிளப்பிய சம்பவம்

Published

on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. பல்வேறு வெற்றிப் படங்களுக்குச் சொந்தக்காரரான ஆர்யா, தற்போது ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ‘எனிமி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விரைவில் அவர் நடிப்பில் எடுத்து முடிக்கப்பட்டுள்ள ‘டெடி’ திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

இந்நிலையில் ஆர்யா மீது இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் பண மோசடி புகார் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்த் திரையுலகமே ஆடிப் போய் உள்ளது. 

இது குறித்து நமக்கு கிடைத்து தகவல்கள் வருமாறு:

இலங்கையைச் சேர்ந்த விதிஷா என்ற அந்தப் பெண் அளித்திருக்கும் புகாரில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ள நடிகர் ஆர்யா, 70 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். ஆனால், அப்படி அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக விரைவில் ஆர்யாவிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. ஆர்யாவுக்கு நடிகை சாயிஷாவுடன் ஏற்கெனவே திருமணமாகி விட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பலராலும் விரும்பப்படுபவராகவும், நல்ல கேரக்டர் கொண்டவராகவும் ஆர்யா அறியப்படுகிறார். அவர் மீது இப்படியான குற்றச்சாட்டுப் பலரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 

seithichurul

Trending

Exit mobile version