தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வருகையால் மதுரையை சுத்தப்படுத்த உத்தரவு: இது திமுக ஆட்சியா?

Published

on

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகாவத் மதுரை வருகையை அடுத்து மதுரையைச் சுத்தப்படுத்த மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் உத்தரவு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திமுகவுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் சுத்தமாக ஆகாது என்பது ஒருவருக்கொருவர் நேர் எதிரான கொள்கையை உடையவர்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகாவத் ஜூலை 22ஆம் தேதி மதுரை வர உள்ளார். அவர் ஜூலை 26ம் தேதி வரை மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து அவர் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் உள்ள வழித்தடத்தில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தெரு விளக்குகளை பராமரிக்க வேண்டும் என்றும் சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டுமென்றும் அவர் பயணம் செய்யும் நேரங்களில் சாலைகளில் மாநகராட்சி பணிகளான சீரமைப்பு பணிகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்

இந்த உத்தரவை பார்க்கும்போது இது திமுக ஆட்சிதானா? என்று பலர் கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

Trending

Exit mobile version