Connect with us

தமிழ்நாடு

ஔவையார், பாரதியாரை மேற்கோளிட்டு ஆவேச உரை; பின்னர் எடப்பாடியாருடன் நடந்த சீக்ரெட் சந்திப்பு – மோடி வருகையும் நடந்ததும்..!

Published

on

இன்று சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஔவையார் மற்றும் பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டி ஆவேசமாக பேசினார். பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தனியாக சந்தித்து கூட்டணி குறித்தும் எதிர் வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்தும் கலந்துரையாடியுள்ளார் பிரதமர் மோடி. 

இன்று காலை 10:30 மணி அளவில் புது டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார் மோடி. பின்னர் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்குப் பக்கத்தில் இருக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் 4 ஆயிரத்து 486 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் துவக்கி வைத்தார். மிகக் குறிப்பாக சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையும், சென்னை கடற்கரை – அத்திப்பட்டு இடையிலான நான்காவது ரயில் பாதையில் ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘வணக்கம் சென்னை’, ‘வணக்கம் தமிழ்நாடு’ எனக் கூறி உரையைத் தொடங்கினார். மேலும் அவர் ஔவையார் மற்றும் பாரதியார் பாடல்களை மேற்கோள்காட்டி உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து அவர், ‘சென்னை மக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி கொடுக்கிறது. இன்று ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் தமிழகத்தின் நீண்ட நாள் வளர்ச்சிக்கு உதவும். 

விவசாய விளை பொருள் உற்பத்தியில் சாதனை படைத்த தமிழக விவசாயிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீர் ஆதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.  கொரோனா காலத்திலும் திட்டமிட்டப்படி மெட்ரோ வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன’ என்றார். 

தொடர்ந்து அவர் மேடையிலேயே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது கைகளைப் பிடித்து உயர்த்திக் காட்டினார். வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வைத்து களமிறங்கும் நிலையில், கூட்டணிக்குள் நிலவும் சலசலப்புகளைப் போக்கவே பிரதமர் மோடி இப்படியான காரியத்தைச் செய்தார் என சொல்லப்படுகிறது. 

நிகழ்ச்சி முடிந்த பின்னர் முதல்வர் பழனிசாமியோடு மட்டும் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் மோடி. அப்போது கூட்டணி வியூகங்கள் குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் பேசப்பட்டதாக தகவல். சில நாட்களுக்கு முன்னர் தான் சசிகலா, சிறையிலிருந்து விடுதலையாகி தமிழக அரசியலுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அவர் கூடிய விரைவில் அதிமுகவைத் தன் கட்டுக்குள் கொண்டு வர அனைத்து வித திட்டங்களையும் தீட்டி வருகிறார் என உள் வட்டாரத் தகவல். இப்படியான சூழலில் எடப்பாடியாருடன் தனியாக ஆலோசனை, ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகிய இருவரது கைகளையும் ஒரே மேடையில் ஒன்றாக உயர்த்திப் பிடித்தது உள்ளிட்ட விஷயங்களை மோடி செய்துள்ளது, சசிகலாவை ஓரங்கட்டவே என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

எது எப்படி இருந்தாலும் மோடியின் வருகையால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 

ஜோதிடம்50 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!