தமிழ்நாடு

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்: தமிழில் டுவிட் போட்ட பிரதமர் மோடி!

Published

on

முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி தமிழில் டுவிட் செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் அதிமுகவினர் உள்பட தமிழக மக்கள் எம்ஜிஆரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் எம்ஜிஆரின் பிறந்த நாளை தமிழக அரசே கொண்டாடும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்து இருந்தது என்பதும் அந்த வகையில் அமைச்சர்கள் உள்பட அரசு அதிகாரிகள் எம்ஜிஆரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரதமர் மோடி சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் எம்ஜிஆரின் பிறந்தநாளுக்கு தமிழில் டுவிட் செய்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது!

seithichurul

Trending

Exit mobile version