இந்தியா
கொரோனா- பிரமதர் மோடி உரை
கொரோனா – பிரமதர் மோடி உரை
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்குப் பிரமதர் மோடி உரை நிகழ்த்தினார்.நேற்று இரவு 8 மணியளவில் நாட்டு மக்களிடம் பேசிய மோடி ,உலகப் போரை விடக் கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவை அனைவரும் உறுதியோடு எதிர்த்து போராட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார் .
பிரமதர் உரையின் அம்சங்கள் :
1.கொரோனா வைரசால் உலகம் மிகப் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. உலகப் போர்களுக்கு இணையான மிகப் பெரும் சேதத்தை கொரோனா உருவாக்கி வருகிறது. கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கி வருகிறது
2.உலகில் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் நாம் அசட்டையாக இருக்கக் கூடாது.
3.கொரோனா நோய்க்கு மருந்து இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை
4.கொரோனா பாதித்த நாடுகளில் நோயின் தாக்கம் திடீரென தீவிரமாக அதிகரித்து வருகிறது.
5.உடனே நடவடிக்கை எடுத்த நாடுகள் கொரோனாவை தடுத்து விட்டன
6.வளர்ந்த நாடுகளும் கொரோனவை தடுக்க போராடி வருகின்றன .
7.மத்திய மாநில அரசுகளின் உத்தரவுகளைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்- வீட்டிலிருந்து பணி செய்யுங்கள்
8.சோசியல் டிஸ்டன்ஸ் என்கிற சமூக இடைவெளியை நாம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் .
9.மார்ச் 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தங்களுக்குத் தாங்களே ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திக் கொள்ள வேண்டும்.அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வரவும்.
10.மக்களின் இந்த ஊரடங்கு நாம் மேலும் பல சோதனைகளைத் தைரியமாகச் சந்திக்க உதவும்.
11.மேலும் சில வாரங்களுக்கு மூத்த குடிமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும்.
12.நோயிலிருந்து தற்காத்துக் கொள்வோம்,மேலும் பரவாமல் தடுப்போம்.
13.முடிந்தவரை விட்டிருந்தே பணி செய்யுங்கள்.
14.நமக்காக உழைத்து வரும் மருத்துவர்,செவிலியர்கள்,பாராமெடிக்கல் ஊழியர்கள்,துப்புரவுப் பணியாளர்கள்,விமான நிலைய ஊழியர்கள்,அரசு ஊழியர்கள்,பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக மார்ச் 22 மலை 5 மணிக்கு மக்கள் அனைவரும் அவரவர் வீட்டு பால்கனி ,வாசல்களில் நின்று 5 நிமிடம் கை தட்டி உற்சாகப்படுத்துவோம் .
15.அரசு எடுத்திருக்கின்ற முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி கொரோனவை விரட்டுவோம் .மனவுறுதியோடு போராடுவோம் .