இந்தியா

மோடி ஒருபோதும் டீ விற்றதில்லை: உண்மையை போட்டுடைத்த 43 வருட நண்பர்!

Published

on

பிரதமர் மோடி ஒருபோதும் டீ விற்றதே இல்லை எனவும், மக்களிடம் அனுதாபத்தை சம்பாதிக்கவே அவர் அப்படி கூறினார் எனவும் அவரது 43 வருட நண்பர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.

தான் ஒரு ஏழைத்தாயின் மகன் எனவும், டீ விற்ற சாதாரண மனிதர் எனவும் கூறி தனது இமேஜை உயர்த்திக்காட்டுகிறார் பிரதமர் மோடி. குஜராத்திலுள்ள டீக்கடை ஒன்றில் பிரதமர் மோடி தன்னுடையை சிறு வயதில் டீ விற்றதாக கூறப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இதனை பிரதானமாக முன்வைத்து பிரச்சாரம் செய்தார் பிரதமர் மோடி. தேர்தல் வெற்றிக்கு பின்னரும் மோடி டீ விற்றதை பெருமையாக கூறி வந்தார்.

இந்நிலையில் மோடி கூறியது உண்மை இல்லை, அவை பொய் என விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவரும் அந்தராஷ்ட்ரிய ஹிந்து பரிஷித் அமைப்பின் தற்போதைய தலைவருமான பிரவீன் தொகாடியா கூறியுள்ளார். பிரதமர் மோடியும் நானும் 43 ஆண்டுகால நண்பர்கள். ஆனால் அவர் ஒருபோதும் டீ விற்றதில்லை. மக்கள் மத்தியில் அனுதாபத்தை சம்பாதிப்பதற்காகவே டீ விற்றவன் என்ற இமேஜை அவர் பயன்படுத்திக் கொள்கிறார் என உண்மையை போட்டுடைத்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version