தமிழ்நாடு

மோடி வார்த்தை ஜிம்னாஸ்டிக்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார்: சோனியா காந்தி விளாசல்!

Published

on

பிரதமர் மோடியின் அறிக்கைகள் நாட்டின் முக முக்கியாமன பிரச்சனைகளைப் புறக்கணிக்கின்றன அல்லது அந்த விஷயங்களில் இருந்து திசைதிருப்ப மோடி வார்த்தை ஜிம்னாஸ்டிக்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

#image_title

பிரபல ஆங்கில நாளிதழ் தி ஹிந்துவில் தலையங்கப் பக்கத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி. அந்த கட்டுரையில், பிரதமர் மோடி நாட்டின் நாடாளுமன்ற, நிர்வாக, நீதித்துறைகளை கொஞ்சம் கொஞ்சமாக செயலற்றதாக்கி வருகிறார். அரசு தனது ஒவ்வொரு அதிகாரத்தையும் தவறாகவே பயன்படுத்தி வருகிறது. மோடி அரசின் செயல்பாடுகள் ஜனநாயகத்தின் வேரையே பிடிங்கி எறிகின்றன.

பாஜகவினரும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் சகிப்புத்தன்மையற்ற, வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களை தொடர்ந்து பேசுகின்றனர். ஆனால் அதுபற்றி துளியும் கவலைப்படாத மோடி அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு ஒருமுறை கூட அழைப்பு விடுக்கவில்லை. மோடியின் ஆட்சியில் மத பண்டிகைகளை மற்றவர்களை அச்சுறுத்தும், கொடுமைப்படுத்தும் வாய்ப்பாகவே பயன்படுத்துகின்றனர்.

ஆனால் மோடியோ நாட்டின் முக முக்கியமான பிரச்சனைகளை புறக்கணிக்கின்றார். முக்கியமான விஷயங்களில் இருந்து மக்களை திசைதிருப்ப மோடி வார்த்தை ஜிம்னாஸ்டிக்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார். மேலும் இந்திய அரசியலமைப்பு மற்றும் அதன் கொள்கைகளை பாதுகாக்க ஒத்த எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளுடன் கைகோர்க்க காங்கிரஸ் தயாராக உள்ளது என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version