தமிழ்நாடு

நேற்று ஒரே மேடையில் ராகுல்-ஸ்டாலின், நாளை ஒரே மேடையில் மோடி-ஈபிஎஸ் ஓபிஎஸ்!

Published

on

நேற்று சேலத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் பிரம்மாண்டமான மாநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரே மேடையில் இரு பெரும் தலைவர்கள் கலந்து கொண்டதை அடுத்து அந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது என்பதும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று திமுக மாநாடு நடைபெற்ற நிலையில் நாளை பிரதமர் மோடி தமிழகத்தில் வரும் நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகளின் தரப்பில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி தாராபுரத்தில் நடைபெறும் பிரமாண்டமான பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். பாஜக மாநில தலைவர் எல் முருகன் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து அவர் தீவிர பிரசாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் தாராபுரத்தில் நாளை 11:30 மணிக்கு பிரதமர் மோடி பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியவர்களும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் தமிழக வருகையை அடுத்து மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏப்ரல் 4ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவடையவுள்ளதை அடுத்து தேசிய தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version