தமிழ்நாடு
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: அண்ணாமலை தொகுதியில் பிரச்சாரம்!
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்புமனுக்கள் தாக்கல் முடிவடைந்து இன்னும் சில நிமிடங்களில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுவரை மனு தாக்கல் செய்த அரசியல்வாதிகள் அனைவரும் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் தமிழக தலைவர்கள் மட்டுமின்றி தேசிய தலைவர்களும் அவ்வப்போது தமிழகம் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கனவே ஒரு சில முறை தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்துக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதி தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகிறார் என்பதும் அண்ணாமலை போட்டியிடும் தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் வேல்முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் ஏப்ரல் 2ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடியின் மதுரை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் மார்ச் 26ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்களும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.