இந்தியா
வாஜ்பாய் இறுதி சடங்கில் கண்ணீர் விட்ட பிரதமர் மோடி!
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இறுதி சடங்கில் பிரதமர் மோடி கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை மரணம் அடைந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணம் அடைந்தார்.
இன்று அவர் இறுதி சடங்கு நடந்தது. பல முக்கிய தலைவர்கள் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.
டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இறுதி சடங்கில் பிரதமர் மோடி கண்ணீர்விட்டு அழுதுள்ளார்..ஸ்மிருதி ஸ்தலத்தில் வாஜ்பாய் உடலை இறக்கியபோது கண்ணீர் விட்டு கலங்கினார்.