தமிழ்நாடு

BJP-இல் இணைந்த ம.நீ.ம பொதுச் செயலாளர் – அப்செட்டில் கமல்!

Published

on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அருணாச்சலம், இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

பாஜகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர், இன்று சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில் அருணாச்சலம், சென்னை, தியாகராய நகரில் உள்ள பாஜகவின் மாநிலத் தலைமை அலுவலகத்தில், அமைச்சர் ஜவடேகர் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை 2018 ஆம் ஆண்டு தொடங்கியபோது, அதன் முக்கியப் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமனம் செய்யப்பட்டார். அருணாச்சலம், தன்னை தீவிர கமல் ரசிகராக அறிவித்துக் கொண்டதுடன், அவரால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியைத் தர முடியும் என்று கூறி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கட்சிப் பணிகளில் இருந்து அருணாச்சலம் விலகியிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கமல்ஹாசன், பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கூட அருணாச்சலம் கலந்து கொள்ளவில்லை என்று மய்யம் தரப்பு குற்றம் சாட்டுகிறது. கட்சித் தலைமைக்கும் அருணாச்சலத்துக்கும் கடந்த சில மாதங்களாக அதிருப்தி நிலவி வந்த நிலையில், அவர் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் கமல் உட்பட மய்யத்தில் பலரும் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

Trending

Exit mobile version