தமிழ்நாடு

மகேந்திரனை அடுத்து திமுகவில் இணையும் பத்மப்ரியா?

Published

on

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தொடர்ச்சியாக விலகி வந்தனர் என்பதை பார்த்தோம். குறிப்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் அவர்களே கட்சியில் இருந்து விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் அவரை தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வந்த பத்மபிரியா என்பவரும் விலகினார். அடுத்தடுத்து தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்யத்தில் இருந்து நிர்வாகிகள் வெளியேறியதால் அக்கட்சி திண்டாட்டத்தில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை வெளியான தகவலின்படி மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் நாளை காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் திமுகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மகேந்திரனை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய பத்மபிரியாவும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவதோடு, அவர்கள் திமுகவில் இணைந்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version