தமிழ்நாடு
‘நான் சொன்ன பிறகே பொள்ளாச்சி விவகாரத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது’ – கமல் அடம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தாம் சொன்ன பிறகே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சீரமைப்போம் தமிழ்நாட்டை என்ற பெயரில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று பொள்ளாச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைப் பற்றி தாம் நினைவுபடுத்திய பிறகே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பேசினார்.
https://twitter.com/ikamalhaasan/status/1349203005594169345?s=20
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், தமது பிரச்சாரத்திற்காக நட்டப்பட்ட விளம்பர பதாகைகளை அமைச்சர் பெருமக்களும், மாநகராட்சி ஊழியர்களும் அகற்றி வருவதாக குற்றம் சாட்டடினார். மேலும், அவ்வாறு விளம்பர பதாகைகளை அகற்றியதால் மக்கள் நீதி மய்யத்திற்கு கூடுதல் விளம்பரம் கிடைத்தாகவும் வஞ்சக சிரிப்புடன் கூறினார்.
முன்னதாக கொட்டும் மழையிலும் குடைக்குள் இருந்த கமல்ஹாசனை, மழையில் நனைந்தபடி மக்கள் வேடிக்கை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/maiamofficial/status/1349188984673501186?s=20